தங்கலான் விமர்சனம்
விருதுகளின் நாயகன் விக்ரமுக்கு இன்னும் எத்தனை விருதுகள் வேண்டுமானாலும் கொடுக்கலாம்
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம்நடிப்பில் உருவாகி, இன்று உலகளவில் வெளிவந்துள்ள திரைப்படம் தங்கலான்’. இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வெளிவந்துள்ள இப்படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.
“விக்ரமுக்கு கட்டாயமாக தேசிய விருது தரவேண்டும். அவர் இந்தப் படத்திற்காக அத்தனை மெனக்கெட்டுள்ளார். வரலாற்று படங்களுக்காக இசையமைக்கும் போது ஜி.வி. பிரகாஷ் சிறப்பாகப் பணியாற்றுவார். அவர் இந்தப் படத்திலும் மிக நுணுக்கமாகப் பணியாற்றியுள்ளார்,”
கோலார் பகுதியில் தங்கம் இருப்பதாகக் கேள்விப்படும் பிரிட்டிஷ் ஜெனரல் க்ளெமென்ட், அதை எடுக்க ஆசைப்படுகிறார். ஆனால் அதற்கு அவருக்கு நிறைய ஆட்கள் தேவைப்படுகிறார்கள். இந்நிலையில், வட ஆற்காடு பகுதியில் இருக்கும் பழங்குடி மக்கள், வழக்கமாகச் சுரங்கத் தொழிலில் ஈடுபடுவதைக் கேள்விப்படுகிறார்.
இதனையடுத்து, அக்கிராமத்தைச் சேர்ந்த விக்ரம் மற்றும் மற்ற பழங்குடி மக்களை அந்த வேலையில் ஈடுபடுத்துகிறார்.
இதற்கிடையே, அப்பகுதியில் இருக்கும் ஒரு தேவதை, அந்தத் தங்கத்தை எடுக்கவிடாமல் பாதுகாத்து வருகிறது. அதைத்தாண்டி அவர்கள் தங்கத்தை எடுத்தார்களா என்பதுதான் படத்தின் கதை.
கோலார் தங்கவயலை அடிப்படையாகக் கொண்டு, அதனோடு தொன்மத்தையும் சேர்த்து இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.