ஹோம்பாலே ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரிப்பில் இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் ரிஷல் ஷெட்டி, ருக்மணி வசந்த், ஜெயராம், குல்ஷன் தேவய்யா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘காந்தாரா – அத்தியாயம் 1’
கொடூர குணம் கொண்ட பாங்கரா அரசன் காந்தாரா பகுதியில் உள்ள ஈஸ்வர பூந்தோட்டத்தில் இருக்கும் இயற்கை மூலிகை பொருட்களை அடைய நினைத்து காந்தாராவிற்கு செல்ல வழியில் அந்த பகுதியை காப்பாற்றும் காவல் தெய்வம் அரசனையும் அவருடைய படை வீரர்களை அழித்துவிடுகிறது.
அங்கிருந்து உயிர் தப்பிக்கும் இளவரசர் ஜெயராம் இனி காந்தாரா பக்கமே போக கூடாது என்று முடிவெடுகிறார், ஜெயராமிற்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது. இந்நிலையில் காந்தாரா பகுதியில் ஒரு ஆழ்துளை கிணறு ஒன்றில் புலியின் பாதுகாப்பில் ஒரு குழந்தை கிடைக்கிறது, அந்த குழந்தைதான் நாயகன் ரிஷப் ஷெட்டி
இதனையடுத்து பல வருடங்களுக்குப் பிறகு ஜெயராம் தனது மகன் குல்ஷன் தேவைய்யாவிற்கு மன்னர் முடி சூடுகிறார். குல்ஷன் முடி சூடிய உடனே வேட்டையாடுவதற்காக காந்தாரா காட்டுக்குச் செல்ல அங்கு வசித்து வரும் ரிஷப் ஷெட்டி இவர்களை விரட்டி அடிக்கிறார்.
காந்தாரா மக்களை எதிர்க்க முடியாமல் தடுமாறும் அரசர் ஜெயராம் அவர்களுடன் சமரசமாக பேசி காந்தாராவை கைப்பற்ற சதி திட்டம் போடுகிறார். இறுதியில் காந்தாராவை கைப்பற்ற அரசர் போட்ட சதி திட்டம் நிறைவேறியதா ? இல்லையா? நாயகன் நாயகன் ரிஷப் ஷெட்டி காந்தாராவையும், மக்களையும் காப்பாற்றினாரா ? இல்லையா? என்பதே ‘காந்தாரா – அத்தியாயம் 1’ படத்தின் மீதிக்கதை.
பழங்குடியினர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகன் ரிஷப் ஷெட்டி அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி உடல் மொழி மற்றும் கண்களில் காட்டும் கோபம் ஆகியவற்றை ஆக்ரோஷமாக வெளிப்படுத்தி குறிப்பாக சண்டை காட்சிகளில் மிரள வைக்கிறார்.