ஜே.எஸ்.எம் மூவி புரொடக்ஷன்ஸ், எம்பெரர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் சார்பில் ஜாஃபர் சாதிக், இர்ஃபான் மாலிக் தயாரிப்பில் இயக்குநர் சபரீஷ் நந்தா இயக்கத்தில் வசந்த் ரவி, சுனில், மெஹ்ரின் பிர்சாடா, அனிகா ,கல்யாண் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’இந்திரா’
போலீஸ் இன்ஸ்பெக்ட்ரான வசந்த் ரவி – மெஹ்ரின் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். ஒருநாள் வசந்த் ரவி மது அருந்திவிட்டு போலீஸ் வாகனத்தை இயக்க விபத்து ஏற்படுகிறது, இதற்காக சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.
வசந்த் ரவிக்கு வேலை இல்லாததால் குடிப்பழக்கம் அதிகமாகிறது ஒரு கட்டத்தில், குடியால் தனது பார்வையை இழந்து விடுகிறார். கண் பார்வை இழந்ததால் கணவனை கண்ணுக்கு கண்ணாக பார்த்து வருகிறார் நாயகி மெஹ்ரின்.
இதேசமயம் தன்னை சீண்டியவர்களை கொடூரமாக கொலை செய்து வரும் சுனில் மணிக்கட்டு பகுதி வரை கையினை துண்டாக வெட்டி வீசி எறிந்து வருகிறார். இதே போல அடுத்தடுத்து சில கொலைகளை செய்து வருகிறார். இதனையடுத்து இந்த வழக்கை விசாரிக்க வருகிறார் போலீஸ் இன்ஸ்பெக்ட்ரான கல்யாண்.
இதே வேளையில் மெஹ்ரின் கொலை செய்யப்படுகிறார். இதனையடுத்து கொலை செய்த கொலைகாரனை தேடி செல்லும் வசந்த் ரவியிடம் சுனில் மாட்டிக் கொள்கிறார். சுனிலிடம் வசந்த்ரவி கேட்ட மெஹ்ரினை தான் கொலை செய்யவில்லை என்று கூறுகிறார் சுனில்
இந்திரா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வசந்த் ரவி காதல், ஆக்க்ஷன், கண் பார்வையற்றவராக என அனைத்திலும் இயல்பான நடிப்பில் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
வசந்த் ரவியின் நண்பராக நடித்திருக்கும் நாகேந்திரா, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் நடன இயக்குநர் கல்யாண் இருவரும் இயல்பாக நடித்து திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ் ஒளிப்பதிவும்
இசையமைப்பாளர் அஜ்மல் தஷீன் இசையும் படத்திற்கு பக்க பலம்