தலைவராக செந்தில்இருக்கும் கட்சியில் யோகி பாபுவும் ,சுப்பு பஞ்சுவும் அரசியல்வாதிகளாக எதிரும் புதிருமாக இருக்கின்றனர் .
இந்நிலையில் ஆவடி நகராட்சியில் மேயர் தேர்தல் வருகிறது .இருவரும் தங்கள் மனைவிகளுக்கு மேயர் பதவிக்கு வேட்பாளராக நிற்க கட்சி தலைவரான செந்திலிடம் சீட் கேட்கிறார்கள் .
ஆனால் செந்திலோ இருவரையும் சுயேட்சையாக நின்று யாருக்கு மக்களிடம் செல்வாக்கு இருக்கிறதோஅவர்களே மேயர் பதவிக்கு தகுதியானவர்கள் என அனுப்பி விடுகிறார் .
இதனையடுத்து வடமாநில பெண்ணான அஷ்மிதாசிங்கை வீட்டை விட்டு வெளியே அனுப்பப்படுகிறார்.
யோகிபாபுவின் இரண்டு மகன்களில் நினைத்தபடி அரசியலில் சாதித்தது யார் ? என்பதை சொல்லும் படம்தான் ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’.
கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் சிறுவர்கள் இமய வர்மன் மற்றும் அத்வைத் ஜெய் மஸ்தான் இருவருமே கதைகேற்றபடி சிறப்பாக நடித்துள்ளனர் .
சிறுமி ஹரிகா கதாபாத்திரம் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தை நினைவு கூர்வது போல் உள்ளது.
இவர்களுடன் சுப்பு பஞ்சு, சித்ரா லட்சுமணன், மயில்சாமி, வைகா ரோஸ், அஸ்மிதா சிங், லிஸி ஆண்டனி, சரவணன் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
சாதகப் பறவைகள் சங்கரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் .
ஒளிப்பதிவாளர் ஜெ.லக்ஷ்மண் குமாரின் ஒளிப்பதிவும் , படத்தொகுப்பாளர் ரிச்சர்ட் கெவின்.ஏ படத்தொகுப்பும் சிறப்பு .
இது வரை பார்க்காத கதையாக சிறுவர்கள் வைத்து தமிழக அரசியல் ,குடும்ப அரசியலில் போட்டி மற்றும் நகைச்சுவையாக நையாண்டி காட்சிகள் என அரசியல் கலந்த நகைச்சுவை படமாக இயக்கியுள்ளார் எழுதி இயக்கியிருக்கும் என்.சங்கர் தயாள்
ரேட்டிங் – 2.5 / 5