விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் – பாத்திமா விஜய் ஆண்டனி, மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில் அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி, வாகை சந்திரசேகர், சுனில் கிர்பலானி, செல் முருகன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’சக்தித் திருமகன்’
1989 ஆண்டு மயிலாடுதுறையில் பழங்குடி பெண் கற்பழித்து கொலை செய்யப்படுகிறார். அவருக்கு பிறந்த குழந்தையை போலீஸ் பணத்திற்காக ஊருக்கு ஒதுக்கு புறத்தில் உள்ள குப்பை கிடங்கில் வீசிவிட்டு சென்று விடுகிறார்கள்.
2025 ஆம் ஆண்டு சென்னை தலைமைச் செயலகத்தில் இடைத்தரகர் பணி செய்து வரும் விஜய் ஆண்டனி, கேட்ட பணத்தை கொடுத்தால் எந்த வேலையாக இருந்தாலும், அதை கச்சிதமாக செய்து முடிக்க கூடியவர். தனது பெயர் வெளிவராமல் எவ்வளவு பெரிய சம்பவமாக இருந்தாலும், அதை திறமையாக செய்து முடிக்க கூடியவர்.
இந்நிலையில் வில்லன் சுனில் கிர்பலானியின் தங்கை கணவர் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்க இவரது பள்ளியில் படிக்கும் மாணவருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்க அந்த மாணவன் தற்கொலை செய்து கொள்கிறார்.
ஒரு கட்டத்தில் விஜய் ஆண்டனி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதற்காக வில்லன் சுனில் கிர்பலானி தங்கை கணவரை தீர்த்து கட்டுகிறார்
இதே நேரத்தில் இந்திய அரசியலுடன் சேர்த்து சர்வதேச அளவில் மிக பெரும் புள்ளியாக இருக்கும் வில்லன் சுனில் கிர்பலானி, விஜய் ஆண்டனி மீது சந்தேகப்பட்டு தனி போலீஸ் படை அமைத்து அனைத்தையும் அபகரித்து அவரை அழிக்க நினைக்கிறார்.
உண்மையில் விஜய் ஆண்டனி பின்னணி என்ன ? அவர் யார் ? என்பதை சமகால அரசியலுடன் சேர்ந்து விறுவிறுப்பாக சொல்லும் படம்தான் ‘சக்தித் திருமகன்’
கதைகேற்றபடி நாயகியாக நடித்திருக்கும் திருப்தி ரவீந்திரா வில்லனாக நடித்திருக்கும்