‘சப்தம்’ திரைப்பட விமர்சனம்

மூணாரில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் மூன்று மாணவர்கள் மர்மமான முறையில் இறக்கிறார்கள். அதனால், அந்த கல்லூரியில் அமானுஷ்ய சக்தி இருப்பதாக தகவல் பரவுவதை தொடர்ந்து, அங்கு உண்மையிலேயே அமானுஷ்யம் இருக்கிறதா? அல்லது கட்டுக்கதையா? என்பதை கண்டுபிடிப்பதற்காக கல்லூரி நிர்வாகம், அமானுஷ்யங்கள் பற்றிய ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொள்ளும் நாயகன் ஆதியை மும்பையில் இருந்து வரவழைக்கிறது.

மும்பையில் வாழ்ந்து வரும் நாயகன் ஆதி சப்தங்கள் மூலம் ஆவிகளான பேய்களை கண்டறியும் பாரா நார்மல் என்கிற டெக்னாலஜி முலம் பலரது பிரச்சினைகளை தீர்வு காணும் தொழிலை செய்து வருகிறார் .

மருத்துவக் கல்லூரியில் நடந்த மர்ம மரணங்களின் பின்னணி குறித்து ஆய்வு மேற்கொள்ளும் ஆதிக்கு பல அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகள் நடக்கின்றன.

இதே கல்லூரி மாணவியான லட்சுமி மேனன் அக்கல்லூரி பயிற்சி ஆசிரியராகவும் இருக்கிறார்.

கல்லூரியில் உள்ள நூலகத்திற்கு செல்லும் லட்சுமி மேனனை அமானுஷ்ய சக்தி பிடித்துவிடுகிறது.

இந்நிலையில் ஆதி லட்சுமிமேனன் மேல் உள்ள அமானுஷ்யம் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும்போது ,,,,,மருத்துவக் கல்லூரியில் பழைய நூலகத்தில் ஆவிகளான பேய்களை கண்டறியும் போது கல்லூரியை வேட்டையாடுவது 42 சிறிய வயது மாற்றுத்திறனாளி ஆவிகள் என்ற ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை லட்சுமிமேனன் மூலம் கண்டுபிடிக்கிறார்.

34 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் ராஜீவ் மேனனின் மனைவி சிம்ரன் தொடர்புடைய 42 ஆவிகள் என்பதை அறிகிறார்.

எதற்காக இந்த 42 மாற்றுத்திறனாளி ஆவிகள் கல்லூரியில் மரணத்தை ஏற்படுத்துகின்றன?

சிம்ரனுக்கும் 42 ஆவிகளுக்கும் உள்ள தொடர்பு என்ன ?
சிம்ரன் 34 ஆண்டுகளாக கோமா நிலையில் இருப்பதற்கு யார் காரணம் ?
42 மாற்றுத்திறனாளி ஆவிகளை கொன்ற கொலையாளி யார் என்பதை ஆதி கண்டுபிடித்தாரா? இல்லையா?என்பதை சொல்லும் படம்தான் ‘சப்தம்’

கதையின் நாயகனாக ஆவிகளைப் பற்றிய ஆராய்ச்சியாளராக நடித்திருக்கும் ஆதி இயல்பான நடிப்பில் கதையுடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிபடுத்துகிறார் .
நாயகியாக நடித்திருக்கும் லஷ்மி மேனன் அழகாக வந்து அளவான நடிப்பின் மூலம் கவர்கிறார்.

சிம்ரன், லைலா, ராஜீவ் மேனன், எம்.எஸ்.பாஸ்கர், அபிநயா, விவேக் பிரசன்னா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் திரைக்கதையின் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் லைலாவின் வில்லத்தனம் நடிப்பில் எடுபடவில்லை .

இசையமைப்பாளர் தமன்.எஸ்-ன் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.

அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு தரம் .

‘ஈரம்’ படம் மூலம் தண்ணீரில் ஆத்மாவை பயணிக்க வைத்து பார்வையாளர்களை அலற வைத்த இயக்குநர் அறிவழகன், இதில் சப்தங்கள் மூலம் ஆவிகளை பயணிக்க வைத்திருக்கிறார். ஆன்மாக்களின் உணர்வுகளை சப்தங்கள் மூலம் வெளிக்காட்டி, அதன் மூலம் பார்வையாளர்கள் மிரளும்படியான காட்சிகளுடன் ஒரு எதிர்பார்ப்புடன் கதையை நகர்த்தி படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் அறிவழகன்

ரேட்டிங் : 3 / 5

 

 

Comments (0)
Add Comment