தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் & எஸ்பி சினிமாஸ் – தேவராஜுலு மார்க்கண்டேயன் தயாரிப்பில் இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய் ராய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், போஸ் வெங்கட், ரமேஷ் திலக், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, சச்சின் கெடேகர் கியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘டீசல்’
1979-ஆம் ஆண்டு காலகட்டத்தில் வடசென்னை கடலோரப்பகுதிகளில் ராட்சத குழாய் மூலம் குருடாயிலை கொண்டு செல்லும் திட்டத்தை அரசு கொண்டு வருகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என அங்குள்ள மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறார்கள்.. இதனால் சாய்குமாரின் நண்பர்கள் இருவர் உயிரை விடுகிறார்கள்.
இதனையடுத்து சாய்குமார் அந்த குழாய் மூலம் வரும் குருடாயிலை திருடி விற்று அதில் வரும் பணத்தில் மீனவ மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கிறார். சாய்குமாரின் வளர்ப்பு மகனான ஹரிஷ் கல்யாண் இந்த தொழிலை பார்த்து கொள்ள இதற்கு போலீஸ் அதிகாரியான வினய் உதவியாக இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் வினய்க்கும் ஹரிஷ் கல்யாணுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இதனால் ஹரிஷ் கல்யாண் தலைமறைவாக இருக்கிறார்.
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட விவேக் பிரசன்னா ராட்சத குழாயில் இருந்து 2 ஆயிரம் லிட்டர் குருடாயிலை திருடி மறைத்து வைத்து விடுகிறார்,
இதனையடுத்து போலீஸ் உயரதிகாரியான வினய் சாய்குமாரை கைது செய்து சிறையில் அடைகிறார். இந்த தகவலை கேள்விப்படும் ஹரிஷ் கல்யாண் தந்தையை காப்பாற்ற களத்தில் இறங்குகிறார்.
இறுதியில் ஹரிஷ் கல்யாண் சாய்குமாரை சிறையில் இருந்து காப்பாற்றினாரா? இல்லையா? காணாமல் போன குருடாயிலை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே ‘டீசல்’ படத்தின் மீதிக்கதை.
மீனவ இளைஞராக நடித்திருக்கும் நாயகன் ஹரிஷ் கல்யாண அதிரடி நாயகன் ஹரிஷ் கல்யாண் அதிரடி நாயகனாக மிரட்டியிருக்கிறார். காதல், நடனம்,எமோஷனல் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த்டியிருக்கிறார்.
வக்கீலாக நடித்திருக்கும் நாயகி அதுல்யா ரவி நாயகனுக்கு துணை நிற்கும் கதாபாத்திரத்தில் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்.
வளர்ப்பு தந்தையாக நடித்திருக்கும் சாய்குமார் தனது அனுபவ நடிப்பின் மூலம் அந்த rகதாபாத்திரத்திற்கு பலம் சேர்கிறார். போலீஸ் உயர் அதிகாரியாக வரும் வினய், போஸ் வெங்கட், அனன்யா, ரமேஷ் திலக், கருணாஸ், சச்சின் கடேகர், ஷாகீர் உசேன் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் திபு நினன் தாமஸின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் உள்ளது. ரிச்சர்ட் எம்.நாதன் மற்றும் எம்.எஸ்.பிரபு ஆகியோரது ஒளிப்பதிவு வடசென்னை அழகை கண் முன் கொண்டு வந்துவிடுகிறார்கள்.
வட சென்னையில் உள்ள மீனவ மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னையை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சண்முகம் முத்துசாமி இத்திரைப்படத்தில் இது மீனவர்களுக்கான பிரச்சனை மட்டும் அல்ல, தமிழக மக்களுக்கான பிரச்சனை என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
மொத்தத்தில் : ‘டீசல்’ – மீனவ நண்பன்
மதிப்பீடு : 3 / 5