டான் பிக்சர்ஸ் மற்றும் வுண்டர்பார்ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் தயாரிப்பில் இயக்குனர் தனுஷ் இயக்கத்தில் தனுஷ் ,நித்யா மேனன், அருண் விஜய், ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், சமுத்திரக்கனி,ஆடுகளம் நரேன்,ஷாலினி பாண்டே, கீதா கைலாசம், இளவரசு, வடிவுக்கரசி, பிரிகிடா சகா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’இட்லி கடை’ .
சங்கராபுரம் என்ற கிராமத்தில் வசிக்கும் ராஜ்கிரண் இட்லி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கீதா கைலாசம் இவர்களுடைய மகன் தனுஷுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். சிவநேசன் இட்லி கடை என்றால் அந்த சுற்று வட்டாரத்தில் பிரபலம் தனக்கு பிறகு அந்த கடையை மகன் தனுஷ் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ராஜ்கிரண் ஆசைப்படுகிறார் .
இதனையடுத்து தனுஷ் கேட்டரிங் படித்து பாங்காக்கில் தொழிலதிபரான சத்யராஜ் நடத்தும் ஹோட்டலில் வேலை பார்க்கிறார். சத்யராஜின் மகள் ஷாலினி பாண்டேயைக் காதலிக்கிறார்.தனுஷின் நேர்மை உழைப்பைப் பார்த்து சத்யராஜும் சம்மதிக்கிறார்.ஆனால் சத்யராஜின் மகன் அருண் விஜய்க்கு இதில் விருப்பமில்லை.
இந்நிலையில் தனுஷ் – ஷாலினி பாண்டே இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் அப்பா ராஜ்கிரண் இறந்து விட தனுஷ் ஊருக்கு செல்கிறார்.
அப்பா வாழ்ந்த வீட்டையும் இட்லி கடையையும் விட்டுச் செல்ல மனமில்லாமல் அங்கேயே இருக்க நினைத்து ஷாலினி பாண்டேவுடனான திருமணம் வேண்டாம் என்று கூறிவிடுகிறார்