வி ஜே கம்பைன்ஸ் சார்பில் சார்பில் ஜகன்னாதன் பரமசிவம் தயாரிப்பில் யு.அன்பு இயக்கத்தில் சண்முக பாண்டியன், கஸ்தூரி ராஜா, யாமினி சந்தர், கருடன் ராம், ரிஷி, முனிஷ்காந்த், யோகி சேது, ஸ்ரீஜித் ரவி, அருள்தாஸ், என்.பி.கே.எஸ்.லோகு, ஏ.வெங்கடேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’படை தலைவன்’
பொள்ளாச்சி பகுதியில் மண்பாண்ட தொழில் செய்து வருபவர் கஸ்தூரி ராஜா மனைவியை இழந்தவர் இவருக்கு சண்முக பாண்டியன் மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள். இவர்களோடு சேர்த்து ஒரு யானையையும் தனது மற்றோரு மகன் போல வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் வட்டிக்கு கடன் கொடுக்கும் ஒருவரிடம் கடன் வாங்கும் கஸ்துரிராஜா சரியான வருமானம் இல்லாததால் கடனை திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலையில் அவமானப்படுத்தப்படுகிறார்.
இதனையடுத்து சண்முக பாண்டியன் பணத் தேவைக்காக யானையை ஒரு திருமண நிகழ்ச்சிக்கு அழைத்து செல்கிறார்.
அங்கு வில்லனின் சதியால் யானைக்கு மதம் பிடிக்க பொது மக்களை தாக்கி விடுகிறது.இதனையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின்படி யானை முகாமிற்கு அனுப்பப்படுகிறது.
மறுநாள் முகாமிற்கு யானையை பார்க்க சண்முக பாண்டியன் செல்ல அங்கு யானை காணாமல் போகிறது. இதே வேளையில் சண்முக பாண்டியனை கொலை செய்ய ஒரு கும்பல் துரத்துகிறது.
முடிவில் நாயகன் சண்முக பாண்டியன் காணாமல் போன யானையை கண்டுபிடித்தாரா?
சண்முக பாண்டியனை கொலை செய்ய நினைக்கும் கும்பல் யார்? என்பதை சொல்லும் படம்தான் ’படை தலைவன்’
நாயகனாக நடித்திருக்கும் சண்முக பாண்டியன் இயல்பான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
சண்முக பாண்டியனின் தந்தையாக நடித்திருக்கும் இயக்குநர் கஸ்தூரி ராஜா, பழங்குடியின பெண்ணாக நடித்திருக்கும் யாமினி சந்தர், வில்லனாக நடித்திருக்கும் கருடன் ராம், ரிஷி, முனிஷ்காந்த், யோகி சேது, ஸ்ரீஜித் ரவி, அருள்தாஸ், என்.பி.கே.எஸ்.லோகு, ஏ.வெங்கடேஷ் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் இளையராஜா இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு உள்ளது.
எஸ்.ஆர்.சதிஷ் குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்கிறது.
பாசமாக தன்னுடன் வளர்ந்த யானையை காப்பாற்ற போராடும் நாயனை மைய கருவாக வைத்து அழுத்தமான திரைக்கதை அமைப்பில் திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் யு.அன்பு
ரேட்டிங் : 3 / 5