அஸ்வின் சந்திரசேகர் இயக்கத்தில் சந்தோஷ் சோபன், மானசா, யோகிபாபு, லிவிங்ஸ்டன், மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் கப்புள் பிரண்ட்லி
கதை
கட்டுமான துறையில் வெற்றியாளனாக வலம் வர துடிக்கும் சந்தோஷ் சோபனும், ஐ.டி. துறையில் கோலோச்ச துடிக்கும் மானசாவும் எதிர்பாராத சூழ்நிலையில் இருவரும் சந்திக்கிறார்கள். மானசா தங்க இடம் இல்லாததால் சந்தோஷ் சோபன் ரூமில் ஒன்றாகவும் தங்க நேர்கிறது. காலப்போக்கில் அவர்கள் காதலர்களாககறார்கள்ஃ . இந்த காதலுக்கு மினசா பெற்றோர் தடைக்கல்லாக வர, சந்தோஷ் சோபனை விட்டு பிரிகிறார் மானசா. இப்படி செல்லும் கதையில் மானசிக்கு இன்னொரு சிக்கல் எட்டிப் பார்க்கிறது. அந்த சிக்கல் என்ன?அந்த சிக்கலில் இருந்து அவர் தப்பித்தாரா? காதலரை கரம் பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
கதாநாயகனாக சந்தோஷ் சோபன் சிறப்பாக நடித்துள்ளார். மானசா கதாநாயகியாக கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்துள்ளார்.
யோகிபாபுவின் நடிப்பும் அருமை.
லிவிங்ஸ்டன். ராஜிவ் கன்கலா, ஸ்ரீரஞ்சனி என இதில் நடித்திருக்கும் அனைவருமே அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
தினேஷ் புருசோத்தமனின் ஒளிப்பதிவு காதலை அழகாக படம் பிடித்துள்ளது.ஆதித்யா ரவீந்திரனின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசலயும் ரசிக்கவைக்கிறது.
இயக்குனர் அஸ்வின் சந்திரசேகர் அழகான காதல் கதயை எல்லோரும்ரசிக்கும்படி வெற்றி படமாக கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்.