Take a fresh look at your lifestyle.

’லோகா – அத்தியாயம் 1 : சந்திரா’ – விமர்சனம்

100

Wayfarer Films தயாரிப்பில் இயக்குனர் டொமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லென், சந்து சலீம்குமார், அருண் குரியன், சாண்டி, டோவினோ தாமஸ், துல்கர் சல்மான் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும்
’லோகா – அத்தியாயம் 1 : சந்திரா’ இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் சினிமாஸ் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.

அதீத சக்திகள் கொண்ட நாயகி கல்யாணி பிரியதர்ஷன் ஸ்வீடனில் எதிரிகளுடன் ஏற்படும் மோதலில் இருந்து உயிர் பிழைத்து பெங்களூர் நகரத்திற்கு வருகிறார். அங்குள்ள ஒரு காபி ஷாப்பில் இரவு நேர வேலையில் சேர அங்கிருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார்.

கல்யாணி பிரியதர்ஷன் வசிக்கும் வீட்டிற்கு எதிரே இருக்கும் நஸ்லன், சந்து சலீம்குமார் மற்றும் அருண் குரியன் ஆகியோர் கல்யாணியுடன் நட்பாக பேசி பழகி வருகிறார்கள். அதே சமயம், 3 பேர் கொண்ட கும்பல் ஆட்டோவில் மனிதர்களை கடத்தி அவர்களது உடல் உறுப்புகளை திருடி வர இதனால் பெங்களூரில் பரபரப்பு ஏற்படுகிறது. அந்த கும்பலுடன் போலீஸ் இன்ஸ்பெக்டரான சாண்டிக்கும் தொடர்பு இருக்கிறது.

ஒரு நாள் இரவு நேரத்தில் கல்யாணி பிரியதர்ஷனை அந்த உடல் உறுப்பு திருடும் கும்பல் ஆட்டோவில் கடத்தி ஊருக்கு ஒதுக்கு புறத்தில் உள்ள தொழில் சாலைக்கு கொண்டு செல்ல அந்த கும்பலில் இரண்டு பேரை கல்யாணி கொன்று விட ஒருவன் மட்டும் தப்பித்து சென்று விடுகிறான்.

அந்த கும்பலுடன் தொடர்புடைய போலீஸ் இன்ஸ்பெக்டரான சாண்டியுடன், கல்யாணி பிரியர்தர்ஷன் மோத வேண்டிய சுழ்நிலை ஏற்படுகிறது.

உயிர் பிழைத்து ஓடும் சாண்டிக்கு அதீத சக்தி கிடைத்த கல்யாணி பிரியதர்ஷனை பழிவாங்க நினைக்கிறார்.
முடிவில் சாண்டியிடம் இருந்து கல்யாணி பிரியர்தர்ஷன் உயிர் பிழைத்தாரா? இல்லையா ?

அதீத சக்திகள் கொண்ட நாயகி கல்யாணி பிரியதர்ஷனுக்கு உதவி செய்தது யார்? எதற்காக ? என்பதை சொல்லும் படம்தான் ’லோகா – அத்தியாயம் 1 : சந்திரா’

சந்திரா என்ற கதாபாத்திரத்தில் அதீத சக்திகள் கொண்ட பெண்ணாக நடித்திருக்கும் கல்யாணி பிரியதர்ஷன் எதார்த்த நடிப்பின் முலம் ரசிகர்களை கவர்கிறார். சூப்பர் உமனாக சண்டை காட்சிகளில் அதிரடி காட்டியிருக்கிறார்.
சந்திராவின் நண்பர்களாக நடித்திருக்கும் நஸ்லன், சந்து சலீம்குமார் மற்றும் அருண் குரியன் ஆகியோர் கதாபாத்திரம் ரசிக்கவும் சிரிக்கவும் முடிகிறது.
நாச்சியப்பா கவுடா என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் நடன இயக்குநர் சாண்டி வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.

சிறப்பு தோற்றத்தில் வரும் டோவினோ தாமஸ், துல்கர் சல்மான் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை கதையோடு பயணிக்கிறது. நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவு அழகாகவும் பிரமாண்டமாகவும் உள்ளது.
அதீத சக்தி படைத்த பெண்ணை மையக்கருவாக வைத்து ஆரம்பம் முதல் இறுதிவரை அனைவரும் பிடிக்கும் வகையில் அழகாக காட்சிகளை கையாண்டு ஒரு முழுநீள ஆக்ஷன் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் டோமினிக் அருண்
மதிப்பீடு : 3.5 / 5