இளம்பெண் ஒருவர் உடல்முழுவதும் கருமை நிறத்தில் மாறி, பிணமாக குப்பைத் தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்படுகிறார். யார் அந்த பெண்ணை கொலை செய்திருப்பார் என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
செய்தித்தாளில் இப்படியொரு சம்பவத்தை படித்த, மும்பை போலீஸ் அதிகாரி விஜய் ஆண்டனி, அந்த வழக்கை தான் விசாரிக்க போலீஸ் தரப்பில் முறையிடுகிறார்.
சென்னை போலீஸ் அதிகாரியான சமுத்திரக்கனி, வழக்கை அன்-அபிஷியலாக விசாரிக்க விஜய் ஆண்டனியிடம் கேட்டுக் கொள்கிறார். விஜய் ஆண்டனியின் மகளும் இதே மாதிரியான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து போனதால், சென்னை வழக்கை விசாரிக்க வருகிறார்.
அதுமட்டுமல்லாமல், வில்லனா விஜய் ஆண்டனிக்கு உடலில் ஒருபுறம் முழுவதுமே கருமை நிறமாக காணப்படுக்கிறது.
தனது பாணியில் விசாரணையை துவங்குகிறார் விஜய் ஆண்டனி. சந்தேகத்தின் பேரில் அஜய் தீஷனை கைது செய்கிறார் விஜய் ஆண்டனி.
அஜய் தீஷனிடம் ஒரு அபூர்வ திறமை இருப்பதை அறிகிறார் விஜய் ஆண்டனி. அஜய் தீஷனின் திறமையை வைத்து அந்த கொலைகாரனை விஜய் ஆண்டனி கண்டறிந்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
சிறப்பான நடிப்பில் கதையின் நாயகனாக விஜய் ஆண்டனி விசாரணை அதிகாரியாக ரசாயனத்தால் உடலில் ஏற்பட்ட பாதிப்போடு, அவர் மேற்கொள்ளும் விசாரணையும், அவரது உடல் மொழியில் மிக திறமையாக கதாபாத்திரத்தை கையாண்டு நடிப்பில் அனைவரது பாராட்டை பெறுகிறார் .
எழுதி இயக்கியிருக்கும் லியோ ஜான் பால் படத்தொகுப்பாளர் என்பதால் படத்தின் முதல் பாதியிலேயே குற்றவாளி இவர் தான், என்று பார்வையாளர்கள் முடிவு செய்துகொள்ளும் அளவுக்கு காட்சிகளை அமைத்திருப்பவர், அவர் தான் குற்றவாளி என்பதை விஜய் ஆண்டனி எப்படி நிரூபிக்கப் போகிறார்? என்ற கேள்விக்கான விடையை மிக விறுவிறுப்பாக நகர்த்திச் செல்கிறார்.
ரேட்டிங் – 3.5 / 5