வேடர் குலத்தில் பிறந்து கடவுள் என்பதே இல்லை, சாமி சிலைகள் அனைத்தும் வெறும் கற்கள் மட்டுமே, என்ற மனநிலையில் இருந்த திண்ணன் என்பவர் மிகச்சிறந்த சிவபக்தர் கண்ணப்பராக உருவெடுத்தது எப்படி? என்ற கண்ணப்பரின் பக்தியின் ஆழத்தை உணர்த்துவது தான் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் கதைக்கரு என்றாலும், சிவபக்தராவதற்கு முன்பு திண்ணனாக இருந்த அவரது வாழ்க்கை, அதில் வரும் காதல், திருமணம், கடவுள் மறுப்பு கொள்கை என இதுவரை வெளியான கண்ணப்பர் பற்றிய படங்களில் சொல்லப்படாத பல அறிய விசயங்களை மிக பிரமாண்டமான முறையிலும், வியக்கத்தக்க முறையிலும் சொல்லியிருப்பதோடு, கடவுள் பக்தியை உணர்வுப்பூர்வமாகவும் சொல்வதே ‘கண்ணப்பா’.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் விஷ்ணு மஞ்சு, கடவுள் மறுப்பாளராக புரட்சிகரமான வசனங்கள் பேசுவது, போர் வீரராக வேகமான இளைஞனாக, காதலனாக காதல் வயப்பட்டு மயங்குவது, சிவபக்தராக மாறி பக்திபரவசத்தில் உருகுவது என திண்ணன் மற்றும் கண்ணப்பர் உருவங்களை உடல் மொழியில் தனது இயல்பான நடிப்பில் திண்ணனாக கடவுளை வெறுக்கும் போது வெளிப்படுத்தும் நடிப்புக்கும், கண்ணப்பராகி பக்தியில் உருகும் போது வெளிப்படுத்தும் நடிப்பிலும் வித்தியாசங்களை காட்டி உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கும் விஷ்ணு மஞ்சு பாராட்டும்படியான நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளார் .
விஷ்ணு மஞ்சுவின் தந்தையாக நடித்திருக்கும் சரத்குமார், ஐந்து குடிகளில் ஒரு குடியின் தலைவராக சந்துடு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சம்பத்ராம், மதுபாலா, முகேஷ் ரிஷி, பிரம்மாஜி, பிரம்மானந்தம், ரகு பாபு, ஐஸ்வர்யா பாஸ்கரன், தேவராஜ், சிவ பாலாஜி, அர்பித் ரங்கா என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வு.
இதுவரை திரையில் சொல்லப்பட்ட கண்ணப்பர் கதையை கதை, திரைக்கதை ஆசிரியராக புதிய கோணத்தில் சொல்லியிருக்கும் விஷ்ணு மஞ்சு, திரை மொழியில் பிரமாண்டமாக சொல்வதற்கான அம்சங்களோடு கதையை கையாண்டிருந்தாலும், கண்ணப்பரின் பக்தியின் ஆழத்தையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
இயக்குநர் முகேஷ் குமார் சிங் கண்ணப்பர் என்ற சிவபக்தரின் பக்தியின் ஆழத்தை வெளிக்காட்டும் ஒரு படமாக இருந்தாலும், பக்தி என்ற பெயரில் மூடப்பழக்கங்களில் மூழ்கியிருப்பவர்களுக்கு சாட்டையடி கொடுக்கும் காட்சிகளை வைத்திருப்பது பாராட்டக்குரியது.
ரேட்டிங் – 4 / 5