மலேசியாவை கதை களமாக வைத்து 7CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் இயக்குநர் ஆறுமுக குமார் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் நாயகனாக விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, திவ்யா பிள்ளை, பப்லு பிருத்விராஜ், பி.எஸ்.அவினாஷ், ராஜ்குமார் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஏஸ்’
துபாய் சிறையில் இருந்து விடுதலையாகும் விஜய் சேதுபதி மலேசியா செல்கிறார். அங்கு யோகிபாபு முலம் திவ்யா பிள்ளை உணவகத்தில் வேலைக்கு சேருகிறார். இவர் வசிக்கும் எதிர் வீட்டில் இருக்கும் நாயகி ருக்மணி காதலிக்கிறார்.
நாயகி ருக்மணிக்கு பணம் தேவை ஏற்படுகிறது. அதனால் கடன் வாங்க ரௌடியான பி.எஸ்.அவினாஷிடம் விஜய் சேதுபதி – யோகிபாபு செல்கிறார்கள். சென்ற இடத்தில் சூதாடி, ஒரு கோடி ரூபாய்க்கு விஜய் சேதுபதி கடனாளியாகி விடுகிறார்.
தாதா அவினாஷுக்கு ஒரு வாரத்தில் கடனை திரும்ப செலுத்தவில்லை என்றால் உயிர் போய்விடும் நிலையில், வங்கிக்கு பணத்தை எடுத்து செல்லும் வண்டியிலிருந்து கோடிகணக்கான பணத்தை கொள்ளையடிக்க விஜய் சேதுபதி திட்டம் போடுகிறார்.